பாகிஸ்தான் ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 30 பேர் காயம்

தினத்தந்தி  தினத்தந்தி
பாகிஸ்தான் ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 30 பேர் காயம்

கராச்சி,
பாகிஸ்தானின் வர்த்தக தலைநகர் என்று கராச்சி நகரில் உள்ள ஷஹ்ரா பைசல் என்ற பகுதியில் நான்கு நட்சத்திர விடுதி ஒன்று இயங்கி வருகிறது. ஆறு தளங்கள் கொண்ட இந்த ஓட்டலின் கீழ் தளத்தில் சமையல் அறை இயங்கி வருகிறது. 
இந்த சமையல் அறையில் இருந்து இன்று எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இந்த தீ மளமளவென  பரவி கட்டிடம் முழுவதும் பரவியது. இதில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் சிக்கினர். 
தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு படை தீயைக்கட்டுக்குள் கொண்டுவந்தது. எனினும் இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
இந்த தீ விபத்து ஏற்படும் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மஸூத் அந்த ஓட்டலில் இருந்து தங்கியிருந்துள்ளார். மற்றொரு கிரிக்கெட் வீரர் யாசின் முர்தசா இரண்டாவது தளத்தில் இருந்து  குதித்து உயிர் தப்பினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கர்மாத் அலி என்ற கிரிக்கெட் வீரர் கண்ணாடியை உடைக்கும் காயப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை