ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மீது இந்திய வம்சாவளி மாணவர் வழக்கு

தினகரன்  தினகரன்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மீது இந்திய வம்சாவளி மாணவர் வழக்கு

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பிராசனோஸ் கல்லூரியில் இங்கிலாந்து வாழ் இந்திய மாணவரான பயஸ் சித்திக் என்பவர் வரலாற்று பாடம் எடுத்து படித்துள்ளார். இந்திய பேரரசர்கள் வரலாற்று பாடத்தை ஆசிரியர்கள் சரியாக நடத்தவில்லை என்றும் சலிப்படைய வைப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனால் அவர் குறைந்த மதிப்பெண் எடுத்து 2வது வகுப்பில் தேர்ச்சி பெற்றதாகவும் வக்கீலுக்கு படிக்க முயலாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்ந்து லண்டன் ஐகோர்ட்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது அவர் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2000ம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கு, தற்போது விசாரணை முடிந்து இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை