வேறு நாடுகளுக்கு பணி அளித்தால் 35 சதவீத வரி : டிரம்ப் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
வேறு நாடுகளுக்கு பணி அளித்தால் 35 சதவீத வரி : டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், அமெரிக்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதில் அமெரிக்காவிலேயே பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும். ஆனால் தனது பணிகளை வேறு நாடுகளுக்கு அளிக்கும் (அவுட்சோர்ஸ்) அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் வேறு நாடுகளில் புதிய தொழிற்சாலை அமைத்து அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய உள்ள நிறுவனங்களுக்கும் 35 சதவீத வரி விதிக்கப்படும்’’ என்று அவர் கூறியுள்ளார். ‘மேக் இன் இந்தியா’ திட்டப்படி பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி கூடங்கள் தொடங்க  திட்டமிட்டுள்ளன. டிரம்ப் எச்சரிக்கையால் அந்த நிறுவனங்கள் பின்வாங்கும் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை