பெட்ரோல் டேங்கர் வெடித்து 73 பேர் பரிதாப சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல் டேங்கர் வெடித்து 73 பேர் பரிதாப சாவு

மபுடொ, -தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கேப்ரிடிசான்ஜே நகரில் இருந்து பெட்ரோல் டேங்கர் லாரி புறப்பட்டது. மலாவி என்ற ஊருக்கு அருகே லாரியை நிறுத்திய டிரைவர், டேங்கரில் இருந்து பெட்ரோலை மக்களுக்கு விற்கத் தொடங்கினார்.

அங்கு பெட்ரோல் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக, மக்கள் ஓடிச் சென்று பெட்ரோல் பெற்றுகொள்ள முண்டியடித்தனர்.

லாரியை சுற்றி மக்கள் கூட்டமாக இருந்த போது எதிர்பாராத விதமாக பெட்ரோலில் தீப்பிடிக்கவே டேங்கர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் அப்பகுதியில் இருந்த 73 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டேங்க் வெடித்து 73 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உலகில் உள்ள மிகவும் ஏழை நாடுகளில் மொசாம்பிக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை