செம்மரக்கட்டை கடத்திய 13 பேர் சிக்கினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
செம்மரக்கட்டை கடத்திய 13 பேர் சிக்கினர்

திருமலை, -ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி பகுதியில் உள்ள செம்மரங்களை கடத்தல் ஆசாமிகள் அவ்வப்போது வெட்டி கடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி படையினர் சித்தூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆப்ரேஷன் ரெட் திட்டத்தின் கீழ் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக கர்நாடக மாநிலம் கடிகனஹள்ளியை சேர்ந்த ைசயது(35), ரஜாக்(35), ைசயத்அஜ்மத்(35) மற்றும் சித்தூரை சேர்ந்த கவுரிசங்கர்(35), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காசி(54), வெங்கடேசன்(23), ரமேஷ்(25), அண்ணாமலை(27), குபேந்திரன்(45), ரமேஷ்(26), தட்சிணாமூர்த்தி(21), ஏழுமலை(33), ஜெய்சங்கர்(33) என 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடிகனஹள்ளியில் பதுக்கி வைத்திருந்த  1. 5 டன் எடையுள்ள ரூ.

1கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

.

மூலக்கதை