ஐ.ஓ.சி விளையாட்டு வீரர்கள் கமிஷன் உறுப்பினராக சாய்னா நியமனம்

தினத்தந்தி  தினத்தந்தி
ஐ.ஓ.சி விளையாட்டு வீரர்கள் கமிஷன் உறுப்பினராக சாய்னா நியமனம்

ஐ.ஓ.சி விளையாட்டு வீரர்கள் கமிஷன் உறுப்பினராக சாய்னா நியமனம்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி) கவுரவமிக்க விளையாட்டு வீரர்கள் கமிஷன் உறுப்பினராக இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன கடிதத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், சாய்னாவுக்கு அனுப்பி இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் சர்வதேச ஐஸ் ஆக்கி வீராங்கனை ஏஞ்சலா ருஜிரோ தலைமையிலான விளையாட்டு வீரர்கள் கமிஷனில் 9 துணைத் தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாய்னா ரியோ ஒலிம்பிக் போட்டியில் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பயிற்சியை ஆரம்பித்து இருக்கும் நிலையில் அவருக்கு இந்த அரிய பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் கமிஷனின் அடுத்த கூட்டம் நவம்பர் 6-ந் தேதி நடக்கிறது. ‘சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலில் சாய்னா அங்கம் வகிக்க இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறோம்’ என்று அவரது தந்தை ஹர்விர்சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

மூலக்கதை