சீன பட்டாசு விற்பனையை தடை செய்யக்கோரி தமிழ்நாடு நவநிர்மான்...

தினத்தந்தி  தினத்தந்தி
சீன பட்டாசு விற்பனையை தடை செய்யக்கோரி தமிழ்நாடு நவநிர்மான்...

தாம்பரம்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள காமராஜபுரத்தில் தமிழ்நாடு நவநிர்மான் சேனா கட்சி சார்பில் சீன பட்டாசுகளின் விற்பனையை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சியின் தலைவர் சிவபாலன் பேசியதாவது:–

தமிழகத்தில் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சீன பட்டாசுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதால், சிவகாசி பட்டாசு ஆலைகளில் வேலை பார்க்கும் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

சீன பட்டாசுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும், 2 ஆயிரம் கன்டெய்னர்களில் மறைமுகமாக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சீன பட்டாசுகளில் இருந்து வெளிப்படும் கொடிய நஞ்சு மரபணுவில் தாக்கத்தை ஏற்படுத்தி, வரும் தலைமுறையை பாதிப்பிற்கு உள்ளாக்கும். எனவே சீனபட்டாசுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பட்டாசுகள் விற்பனையை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை