2வது பசுமை ஏர்போர்ட் திறப்பு: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

தினகரன்  தினகரன்
2வது பசுமை ஏர்போர்ட் திறப்பு: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

வதோதரா: நாட்டின் 2வது பசுமை விமான நிலையத்தை குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கட்டப்பட்ட, நாட்டின் முதல் பசுமை விமான நிலையம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் தொடங்கப்பட்டது. அடுத்ததாக 2வது பசுமை விமான நிலையம் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் ரூ.160 கோடி செலவில் கடந்த 7 ஆண்டுகளாக கட்டப்பட்டது. 17,500 சதுர கி.மீ பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் 700 பயணிகளை கையாள முடியும். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு வசதியாக 18 கவுன்டர்கள் இந்த விமான ...

மூலக்கதை