பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த 3 குழுவை அமைத்தது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த 3 குழுவை அமைத்தது மத்திய அரசு

புதுடெல்லி: டெல்லியில் பறவைக் காய்ச்சலுக்கு இதுவரை 24 பறவைகள் பலியானதால், அவற்றை கட்டுப்படுத்த 3 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் வெளிநாட்டு பறவைகளான பெலிக்கன், வெள்ளை வாத்து உட்பட 24 பறவைகள் இதுவரை பலியாகியுள்ளன.  இவைகள் எச்5என்1 வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.  இதையடுத்து பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரியல் பூங்கா, மான் பூங்கா ஆகியவை மூடப்பட்டது. மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவிலும் 15 பறவைகள் பலியாயின. பறவை காய்ச்சல் வைரசால் ...

மூலக்கதை