அந்த நடிகருடன் நடிக்கும் போது மட்டும் பயமாகவே இருந்தது : ஸ்ருதி
ஸ்ருதிஹாசன் தென்னிந்தியா, வட இந்தியா என கலக்கி வருகிறார். இதில் குறிப்பாக தென்னிந்தியாவில் விஜய், அஜித், பவன் கல்யான், மகேஷ்பாபு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் பாலிவுட் படங்கள் குறித்து கேட்டுள்ளனர், இதற்கு இவர் ‘பாலிவுட்டில் பணியாற்றுவது ஒரு நல்ல அனுபவம்.
அக்ஷய் குமாருடன் நடித்தது மிகவும் சிறந்த அனுபவம், ஆனால், இம்ரான் ஹஸ்மியுடன் நடித்தது தான் மிகவும் த்ரில்லாக இருந்தது.
ஏனெனில் அவர் பல படங்களில் நடித்து விட்டார், என்னுடைய இரண்டாவது பாலிவுட் படமே அவருடன் தான்.
அவருடன் நடிக்கும் போது தான் எனக்கு பயமாக இருந்தது’ என கூறியுள்ளார்.