அலுவலக பணிநேரங்களில் மாற்றம் செய்ய நடவடிக்கை
இலங்கைத் தீவில் அதிகவான போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரச அலுவலக பணி நேரத்தில் மாற்றங்களை செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அலுவலகங்களில் பணிகள் ஆரம்பிக்கும் நேரத்தை முற்பகல் 9.30க்கும் முடியும் நேரத்தை பிற்பகல் 5.30 மணிக்கும் மாற்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலில் இதனை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச அலுவலங்களில் ஆரம்பித்து, வெற்றியளித்த பின்னர் நாடு முழுவதும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அலுவலக பணி நேரம் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது.