பானாசோனிக் நிறுவனம்சந்தை பங்களிப்பு அதிகரிப்பு
புதுடில்லி;ஜப்பான் நாட்டை சேர்ந்த, பானாசோனிக், வீட்டு உபயோக மின் சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், வீடுகளில் பயன்படுத்தும் ஏர்பியூரிபையர் சாதனங்களை, அதிகளவில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் பொது மேலாளர் சையத் மூனிஸ் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஏர்பியூரிபையரை தரமான முறையில் உற்பத்தி செய்து வழங்குகிறது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் ஏர்பியூரிபையர் விற்க திட்டமிட்டு உள்ளது. இதன் மதிப்பு, 20 கோடி ரூபாய். ஆண்டுதோறும், ஏர்பியூரிபையர் விற்பனை, 30 சதவீதம் அதிகரித்து வருகிறது.
பானாசோனிக், அடுத்த நான்கு ஆண்டுகளில், ஏர்பியூரிபையர் மூலம், 1,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, அந்த சாதனங்களின் சந்தையில் எங்கள் நிறுவனம், 20 சதவீத பங்களிப்பை கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.