பொது காப்பீட்டு பிரீமியம் ரூ.1.20 லட்சம் கோடி வருவாய்
மும்பை:பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமிய வருவாய், 1.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. பொது காப்பீட்டு துறை வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களின் பிரீமிய வருவாய், கடந்த நிதியாண்டில், 96 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், செப்., மாதம் வரையிலான காலத்தில், பொது காப்பீட்டு துறை நிறுவனங்களின் மொத்த பிரீமிய வருவாய், 60 ஆயிரத்து, 408 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 46 ஆயிரத்து, 966 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், பிரீமிய வசூல், 1.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது குறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மத்திய அரசு, பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தை, கடந்த ஜூலையில் அறிமுகம் செய்தது. இதன் மூலம், பொது காப்பீட்டு துறை வளர்ச்சி கண்டு வருகிறது’ என்றார்.