சிங்கப்பூர் மருத்துவர்கள் வருகை: லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் புறப்பட்டார்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
சிங்கப்பூர் மருத்துவர்கள் வருகை: லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் புறப்பட்டார்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு வந்திருப்பதை அடுத்து, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்பல்லோவில் இருந்து புறப்பட்டனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 14ம் தேதி முதல், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டின் அறிவுறுத்தலின்படி, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் இன்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து, இதுவரை சிகிச்சை அளித்து வந்த ரிச்சர்ட் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.

மூலக்கதை