ஜெ.விற்கு பிரசாதம் கொடுக்க சென்ற கோகுல இந்திரா மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ஜெ.விற்கு பிரசாதம் கொடுக்க சென்ற கோகுல இந்திரா மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்

ஜெயலலிதா குணமடைய வேண்டி நடத்திய பூஜையின், பிரசாதத்தை அவரிடம் கொடுக்க சென்ற முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மருத்துமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இன்று புதன்கிழமை [12-10-2016] காலை முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தினர்.

பூஜை முடிந்ததும் பிரசாதத்தை ஜெயலலிதாவிடம் கொடுப்பதற்காக அப்பல்லோ 2ஆவது தளத்திற்கு கோகுல இந்திரா சென்றார். ஆனால், கோகுல இந்திராவை மருத்துமனை நிர்வாகத்தினர் முதல் தளத்திலேயே தடுத்து நிறுத்தினர்.

மேலும், கோகுல இந்திரா, பிரசாதத்திற்கு அனுமதி இல்லை என்றுகூறி, அவரை இரண்டாவது தளம் செல்லவும் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால், அதிருப்தி அடைந்த கோகுல இந்திரா ஏமாற்றத்துடன் திரும்பினார்.

மூலக்கதை