பெண்கள் மீது கொண்ட அதிக மோகம்: இளைஞர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியானது

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
பெண்கள் மீது கொண்ட அதிக மோகம்: இளைஞர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியானது

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரிடம் இருக்கும் பாலியல் பெண்களின் மீது கொண்ட மோகம் காரணமாகவே இந்திய நாட்டு இளைஞர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பர்பானி பகுதியை சேர்ந்த நாசர், அலியாஸ் குவாடிர், பின் அபுபக்கர், யாபை ஷா ஆகிய 4 பேரும் ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக கடந்த 14 ஆம் திகதி சிரியா செல்ல முற்படுகையில் அவுரங்காபாத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து ஒரு போராளியாக மாற வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் செல்லவில்லை. மாறாக அங்கிருக்கம் பாலியல் பெண்களின் மீது கொண்ட மோகத்தால் அங்கு செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பும் தங்களிடம் இருக்கும் பெண்களை பயன்படுத்தி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.இதில் நாசன் என்பவரின் தொலைப்பேசியை ஆராய்ந்து பார்க்கையில், அவர் பாலியல் சம்பந்தமான தகவல்களையே அதிகம் தேடியுள்ளார். மேலும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய வலைதளங்களின் வாயிலாக பாலியல் பெண்களை பற்றி அறிந்துகொண்டுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பில் உள்ள பெண்களின் வயது மற்றும் அவர்கள் சம்பந்தமான பல கேள்விகளை கேட்டறிந்துள்ளார். மேலும் சமூகவலைதளத்தில் பெண்கள் சம்பந்தமான புகைப்படங்களையும் பார்த்துள்ளார்.

மூலக்கதை