எல்லோரும் என்னை மன்னிச்சுருங்க- த்ரிஷா ஏன் இப்படி செய்தார்?
த்ரிஷா தொடர்ந்து 12 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வந்துள்ள படம் நாயகி.
இப்படம் ஏற்கனவே தெலுங்கில் வந்து படுதோல்வியடைந்தது, அதனால், என்னமோ இந்த படம் குறித்து த்ரிஷா தற்போது வரை எந்த விளம்பரமும் செய்யவில்லை.
இதுக்குறித்து அவர் ‘இந்த படத்திற்கு நான் விளம்பரம் செய்யாததற்காக அனைத்து மீடியா நண்பர்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அதற்கு ஒரு காரணமும் உள்ளது, அதை விரைவில் நானே வெளியிடுகிறேன்’ என்று கூறியுள்ளார். அப்படி என்ன காரணம் என்று அனைவருமே குழப்பத்தில் உள்ளனர்.