கௌதம் மேனனுக்கு வந்த பெரிய சிக்கல்- எப்படி சமாளிப்பார்?
கௌதம் மேனன் சில வருடங்களுக்கு முன் பெரிய பிரச்சனையில் இருந்தார். அஜித் கொடுத்த கால்ஷிட்டால் மீண்டு வந்து தற்போது சிம்பு, தனுஷ் படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பிலும் ரெடியாகியுள்ளது.
இந்த இரண்டு படத்தையும் கடந்த மாதமே ரிலிஸ் செய்யவிருந்தார், ஆனால், சிம்பு கால்ஷிட் பிரச்சனையால் படம் தள்ளிப்போனது.
ஒரு வழியாக செப்டம்பர் 30ம் தேதி படத்தை வெளியிடலாம் என்று நினைத்தால், நாகசைதன்யா தெலுங்கில் நடித்த ப்ரேமம் அக்டோபர் முதல் வாரத்தில் வரவிருக்கின்றது.
இதனால், ப்ரேமம் படத்தின் வசூல் பாதிக்கும் என 30ம் தேதியும் ரிலிஸ் செய்யக்கூடாது என தற்போது தெலுங்கில் பிரச்சனை எழுந்துள்ளது.
இந்த நிலையில் கௌதம் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறாராம், எப்படியும் படம் அக்டோபர் மாதத்தில் ரிலிஸ் ஆகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.