50 ஆண்டுகளின் பின் கியூபாவிற்கான தூதரை நியமித்தது அமெரிக்கா
கியூபாவிற்கான அமெரிக்கத் தூதராக ஜெஃப்ரி டிலாரன்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவிற்கான தூதரை அமெரிக்கா நியமித்துள்ளது. கியூபாவிற்கு தூதர் நியமிக்கப்பட்டமையானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதின் அடுத்த கட்டம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். அரை நூற்றாண்டுகளாக பகை நாடுகளாக இருந்து வந்த அமெரிக்காவும் கியூபாவும் அண்மைக்காலமாக பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post 50 ஆண்டுகளின் பின் கியூபாவிற்கான தூதரை நியமித்தது அமெரிக்கா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.