ஹரித்துவாரில் கங்கை ஆரத்தி விழாவில் பிரணாப் முகர்ஜி பங்கேற்பு
டேராடூன்,
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3–நாள் சுற்றுப்பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்று உள்ளார். பயணத்தின் 2–வது நாளான நேற்று, அவர் அங்கு உள்ள புகழ் பெற்ற கேதர்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துவிட்டு அவர் டேராடூன் திரும்பினார். 3-வது நாளான இன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கங்கை ஆரத்தி விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.