பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது நடந்த தாக்குதல் பாதுகாப்பு ...

தினத்தந்தி  தினத்தந்தி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது நடந்த தாக்குதல் பாதுகாப்பு ...

புதுடெல்லி,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவுவதற்கு தயாராக இருந்த தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கை என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று கூறியுள்ளார்.

இது பற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்து படைகளையும் எதிர்க்கும் திறனுடன் இந்தியா உள்ளது.  இந்திய ராணுவம் மற்றும் நரேந்திர மோடியின் தலைமையினால் நாம் பெருமை அடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முதன்முறையாக மேற்கொண்ட நேரடி ராணுவ நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்த பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.  நிலக்கரி, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுரங்கங்களுக்கான மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் செய்தியில், நமது நாட்டினை பாதுகாக்க தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு பாராட்டுகள்.  தீவிரவாதத்திற்கு எதிராக போரிடும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தனது டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தானின் மண்ணில் இருந்து தீவிரவாதம் தொடங்குவது பற்றி சோதனை செய்யும்படி மேற்கொண்ட தொடர்ச்சியான தூதரக முயற்சிகளுக்கு முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மூலக்கதை