போர் மேகம் – எல்லையோர இந்திய மக்கள் அவசரமாக வெளியேற்றம்! தயார் நிலையில் மருத்துவமனைகள்!

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
போர் மேகம் – எல்லையோர இந்திய மக்கள் அவசரமாக வெளியேற்றம்! தயார் நிலையில் மருத்துவமனைகள்!

உரி தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை இந்தியா மற்றும் அதன் நட்பு நாடுகள் புறக்கணித்தன.

தொடர்ந்து நேற்று இரவு பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் இருப்பதாக கருதப்படும் பகுதியில் இந்திய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது ராணுவ முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தி விட்டதாகவும் 2 வீரர்கள் உயிரிழந்து விட்டதாகவும் பாகிஸ்தான் கூறி வருகிறது.

ஆத்திரமூட்டும் நடவடிக்கை இல்லாமல் இந்தியா வேண்டுமென்று தாக்கி உள்ளதாகவும், அமைதியாக இருப்பதற்கு பெயர் கோழைத்தனம் இல்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

அதே நேரம் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராணுவ நடவடிக்கைக்கு முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதன்கோட்டில் இருந்து பொதுமக்கள் மூட்டை முடிச்சுகளுடன் படகில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதே போல் அட்டாரி எல்லையில் இருப்பவர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பதன்கோட்டில் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை