ராம்குமார் மரணத்தில் தமிழக அரசின் செயல்பாடு சந்தேகத்தை அளிக்கிறது !! தொல். திருமாவளவன்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ராம்குமார் மரணத்தில் தமிழக அரசின் செயல்பாடு சந்தேகத்தை அளிக்கிறது !! தொல். திருமாவளவன்

ராம்குமார் வழக்கில் தமிழக அரசு மிகப் பிடிவாதமாக மேலும் சந்தேகத்தை வலுப்படுதுகிறது.உச்ச நீதிமன்றம் வரை தமிழக அரசு தலையிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ராம்குமார் வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்று மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசனை செய்யப்படும். ராம்குமார் வழக்கில் தமிழக அரசின் செயல்பாடு ராம்குமார் மரணத்தில் உள்ள சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

மேலும் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு  திரும்பப் பெற வேண்டும்.ஒரே தேசம் ஒரே கல்வி கொள்கை ஒரு குறுப்பிட்ட கலாச்சாரத்தை புறக்கணிக்கிறது. தனியார் மையமாக்குதல் மற்றும் இந்துத்துவ மையமாக்குதலை விடுதலை சிறுத்தைகள் கட்சி  வண்மையாக கண்டிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.

மூலக்கதை