ஒலிம்பிக் வீராங்கனை சிந்து, கோபிசந்த் திருமலையில் வழிபாடு

தினமணி  தினமணி
ஒலிம்பிக் வீராங்கனை சிந்து, கோபிசந்த் திருமலையில் வழிபாடு

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனர்.

திருமலைக்கு சனிக்கிழமை வந்த அவர்கள், இரவு திருமலையில் தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தின்போது ஏழுமலையானை வழிபட்டனர்.

ஏழுமலையானை தரிசிக்கும் முன் சிந்து தனது எடைக்கு எடை வெல்லத்தை வழங்கினார். 68 கிலோ வெல்லத்துக்கு உரிய தொகை ரூ. 2,381ஐ தேவஸ்தானத்துக்கு அவர் வழங்கினார்.

தரிசனம் முடித்து திரும்பி வந்த அவர்களின் குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதம் வழங்கினர்.

மூலக்கதை