தெரஸாவுக்கு புனிதர் பட்டம்: மோடி, பிரணாப் புகழாரம்

தினமணி  தினமணி

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா புனிதர் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது மறக்க முடியாத ஒன்றாகும்' என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட செய்தி:

அன்னை தெரஸா இரக்க குணம் மிகுந்தவர் ஆவார். ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு சேவை செய்வதற்காகவே தனது வாழ்க்கை முழுவதையும் அவர் அர்ப்பணித்துக் கொண்டார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் அன்னை தெரஸாவுக்கு புகழாரம் சூட்டினர்.

மூலக்கதை