டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 121 இலக்கு

தினமணி  தினமணி

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 13-ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - டியூட்டி பாட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த டியூட்டி பாட்ரியாட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு கச்சிதமாக 120 எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான கௌசிக் காந்தி 35 ரன்களும் (23 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் அபினவ் முகுந்த் 24 ரன்களும் (29 பந்து) சேர்த்தனர். எதிரணி தரப்பில் அதிகபட்சமாக எம்.எஸ்.சஞ்சஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 121 ரன்களை இலக்காகக் கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்தது.

இன்றைய ஆட்டங்கள்

ரூபி காஞ்சி வாரியர்ஸ் - விபி திருவள்ளூர் வீரன்ஸ்

நேரம்: பிற்பகல் 2.30.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ்

நேரம்: மாலை 6.30.

இடம்: திருநெல்வேலி.

மூலக்கதை