டிஎன்பிஎல்: காரைக்குடி அணி வெற்றி

தினமணி  தினமணி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியைத் தோற்கடித்தது.

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் கேப்டன் பத்ரிநாத் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக கணபதி 28 ரன்கள் எடுத்தார்.

தூத்துக்குடி அணி தரப்பில் அஸ்வின் கிறிஸ்து 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக காந்தி 27 ரன்களும், ஆனந்த் 24 ரன்களும் எடுத்தனர்.

காரைக்குடி தரப்பில் கணபதி 3 விக்கெட்டுகளையும், ராஜ்குமார் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். காரைக்குடி வீரர் கணபதி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மூலக்கதை