இளம் வீரர்களை ஊக்கப்படுத்துகிறது டிஎன்பிஎல்

தினமணி  தினமணி
இளம் வீரர்களை ஊக்கப்படுத்துகிறது டிஎன்பிஎல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என்றார் கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி.

திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வீரருமான எல்.பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சனிக்கிழமை (செப்.3) நடைபெறும் போட்டியில் தூத்துக்குடி அணியும், காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன. இந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. எங்களது அணியில் அனைத்து வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராட தயாராக உள்ளனர்.

பேட்டிங், பெளலிங், பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். எதிர்அணியை பற்றி கவலைப்படாமல், எங்களது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். டி20 போட்டிகளைப் பொருத்தவரை, எதுவும் நடக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப வெற்றிக்கான முயற்சிகளை எடுப்போம் என்றார் அவர்.

காரைக்குடி அணி வீரர் பத்ரிநாத் கூறுகையில், ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்த மைதானத்தில் விளையாடியுள்ளேன்.

அதனால் இந்த ஆடுகளம் பற்றி தெரியும். வரும் போட்டியில் வெற்றிபெற எங்களது அணி வீரர்கள் கடுமையாக உழைப்பார்கள். அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

மூலக்கதை