பட்டாபிராமில் மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது

தினத்தந்தி  தினத்தந்தி
பட்டாபிராமில் மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஆவடி,

ஆவடி அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 22). இவரது நண்பர்கள் தியாகு (26), குருபிரசாத் (23), வெங்கடேசன் (24). நேற்று முன்தினம் இரவு பட்டாபிராம் பாபு நகர் அருகே மோசஸ் மற்றும் அவரது நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பட்டாபிராம் உழைப்பாளர் நகரைச் சேர்ந்த அஜீஸ் (28), தியாகுவிடம் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் எனது மாமியாரை ஜாமீனில் எடுக்க நீ யார்? என்று கேட்டு தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் தியாகு மற்றும் அவரது நண்பர்கள் அஜீசை தாக்கினர்.  அப்போது அஜீஸ் மறைத்து வைத்திருந்த பிளேடால் மோசஸ் நெற்றியில் வெட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த தியாகு பாட்டிலை உடைத்து அஜீசை குத்த முயன்றார். ஆனால் அதற்குள் அஜீஸ் தப்பி ஓடி விட்டார். காயம் அடைந்த மோசஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகு, குருபிரசாத், வெங்கடேசன் மற்றும் அஜீசை கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான மோசஸ்சை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை