காரணீசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் குளித்தவர் சாவு மகளின் திருமண அழைப்பிதழை...

தினத்தந்தி  தினத்தந்தி
காரணீசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் குளித்தவர் சாவு மகளின் திருமண அழைப்பிதழை...

சென்னை,

சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, சைதாப்பேட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அருகில் உள்ள காரணீசுவரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். கோவில் தெப்பக்குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி சீனிவாசன் தெப்பக்குளத்தில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார். பின்னர் நீரில் மூழ்கினார்.

இதைப்பார்த்த பக்தர்கள் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சைதாப்பேட்டை நிலைய அதிகாரி சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மிதவை படகு மூலம் தெப்பக்குளத்தில் மூழ்கிய சீனிவாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கு பின்னர் சீனிவாசன் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை