தாய், மகள் பலாத்கார விவகாரத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்த உ.பி. அமைச்சருக்கு நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
தாய், மகள் பலாத்கார விவகாரத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்த உ.பி. அமைச்சருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: தாய், மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திட்டமிட்ட அரசியல் சதி என கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த மாதம் 29ம் தேதி, புலந்தர்சாகர் வழியாக நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த கும்பல், காரிலிருந்து 13 வயது சிறுமியையும், தாயையும் கடத்தி சென்று பலாத்காரம் செய்தது.  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ...

மூலக்கதை