துலீப் டிராபி கிரிக்கெட் அகர்வால், கம்பீர் அரை சதம்
புதுடெல்லி: இந்தியா ரெட் அணியுடனான துலீப் டிராபி லீக் ஆட்டத்தில் (4 நாள்), இந்தியா நீலம் அணி விக்கெட் இழப்பின்றி 105 ரன் எடுத்துள்ளது. கேப்டன் கம்பீர், மயாங்க் அகர்வால் அரை சதம் விளாசினர். கிரேட்டர் நொய்டா விளையாட்டு வளாக மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா சிவப்பு அணி கேப்டன் யுவராஜ் சிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியா நீலம் தொடக்க வீரர்களாக அகர்வால், கம்பீர் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். இந்தியா நீலம் 34.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 105 ரன் எடுத்திருந்த நிலையில், கனமழை கொட்டியதால் முதல் ...