தமிழர்களுக்கு மற்றொரு பெருமையை பெற்றுக்கொடுக்கும் துணைப் பொலிஸ்மா அதிபர் நிசாந் துரையப்பா

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
தமிழர்களுக்கு மற்றொரு பெருமையை பெற்றுக்கொடுக்கும் துணைப் பொலிஸ்மா அதிபர் நிசாந் துரையப்பா

ஹால்ரன் பிராந்தியப் துணைப் பொலிஸ்மா அதிபர் நிசாந் துரையப்பா கனடாவின் அதியுயர் விருதினைப் பெறவுள்ளார். இதன்மூலம் கனடாவில் தமிழர்கள் பெறும் விருதுகளின் பட்டியலில் மற்றுமொரு பெருமைக்குறிய விருதாக நிசாந் இதனைப் பெறவுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற தமிழர் விழா சிறப்பு நிகழ்வில் நிசாந் துரையப்பா கலந்துகொண்டு, நிகழ்வை சிறப்பித்து தமிழர்களை மகிழ்வூட்டினார்.

குறித்த நிகழ்வில் துணைப் பொலிஸ்மா அதிபர் நிசாந், ரொறன்ரோப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சுரேன் சிவதாசன், கஜன் கதிரவேலு, நிரான் ஜெயநேசன், ஜொனி பொப்லி உள்ளிட்ட பல இளம் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் துணைப்படையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கனேடியத் தமிழ் பாதுகாப்பு வலையமைப்பு என்ற அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டது. நிசாந் துரையப்பாவும் இதனை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை