கறுப்பின இளைஞரின் நினைவு தின ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி சூடு

BBC  BBC
கறுப்பின இளைஞரின் நினைவு தின ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி சூடு

வெள்ளை இன போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின இளைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள ஃபெர்குஸன் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கார், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் மீது மோதியதைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

முன்னதாக, மைக்கேல் பிரவுன் கொல்லப்பட்டது அமெரிக்காவில் நீடித்த அமைதியின்மையை ஏற்படுத்தியது.

மேலும், கறுப்பின மக்கள் மீது அமெரிக்க போலீசார் வன்முறையை பயன்படுத்துவதாக அமெரிக்க முழுவதும் விவாதம் நடைபெற்றது.

மூலக்கதை