அஸாம் தீவிரவாத தாக்குதல்: 14 பேர் பலி, ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

BBC  BBC
அஸாம் தீவிரவாத தாக்குதல்: 14 பேர் பலி, ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அஸாமில் சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

இந்த தாக்குதலை, தேசிய ஜனநாயக போடோலாண்ட் முன்னணியினர் என்ற தீவிரவாத குழு நடத்தி உள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அக்குழுவை சேர்ந்த ஒரு தீவிரவாதியையும் தாங்கள் கொன்றுவிட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

கோக்ரஜார் நகரில் வன்முறை ஏற்பட்ட பகுதியை சுற்றி பாதுகாப்பு படையினர் காவல் வளையம் அமைத்துள்ளனர்.

மேலும், மற்ற தாக்குதல்தாரிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போடோ இனக் கிளர்ச்சியாளர்கள் போடோலாண்ட் பகுதிக்கு முழு மாநில அந்தஸ்து வேண்டுகிறார்கள்.

2012 இல் இருந்து போடோலாண்டில் இன ரீதியிலான தொடர் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.

மூலக்கதை