டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் தாக்க முயற்சி : தேர்தல் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

TAMIL CNN  TAMIL CNN
டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் தாக்க முயற்சி : தேர்தல் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகஸ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்.

அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை பறித்து டிரம்ப் மீது சுட முயன்றுள்ளார்.

இச்சம்பவத்தில் சுதாரித்துக்கொண்ட பொலிசார் அதிரடியாக செயல்பட்டு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர் . இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த நபர் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து நெவாடா பகுதிக்கு டிரம்ப் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்குடன் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Michael Sandford என்ற அந்த இளைஞன் முன்னதாக பொலிசாரை அணுகி தமக்கு டிரம்பின் ஆட்டோகிராப் வேண்டும் என போலியாக கேட்டுள்ளார். இந்த பேச்சினிடையே அவரது துப்பாக்கியை உருவியதாக கூறப்படுகிறது.

பிரித்தானியா ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் அந்த இளைஞர் கடந்த ஓராண்டாக டிரம்ப் மீதான தாக்குதலுக்கு முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக லாஸ் வேகஸ் பகுதியில் துப்பாக்கிசுடும் பயிற்சியிலும் அந்த நபர் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் தமக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை மாகாண நிர்வாகம் செய்து தரவில்லை என குற்றம்சாட்டினார்.

மூலக்கதை