ஜப்பானில் இன்று தொடங்குகிறது ஜி-7 மாநாடு: பயங்கரவாதம், அகதிகள் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க திட்டம்

TAMIL CNN  TAMIL CNN
ஜப்பானில் இன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: பயங்கரவாதம், அகதிகள் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க திட்டம்

ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஆண்டு ஜி-7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் இரண்டு நாட்கள் நடைபெறும் இலங்கை அதிபர் மத்ரி பால சிறிசேனா சிறப்பு அழைப்பாளராக ஜப்பான் அரசால் அழைக்கப்பட்டுள்ளார்.

தென் மேற்கு டோக்கியோவில் உள்ள ஷிமாவில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பொருளாதார, பயங்கரவாதம் மற்றும் அகதிகள் பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தென் சீனக்கடலில் நிலவி வரும் சூழல் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை