புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

தமிழ்வின்  தமிழ்வின்
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

77 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகையிரதத்துடன் சிறிய லொறியொன்று மோதுண்டமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

புகையிரத கடவை மூடப்பட்டிருந்த நிலையயிலும் லொறியை உட்செலுத்த முயற்சித்தமையே குறித்த விபத்திற்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்த வாயில் காப்பாளர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை