பேலியகொட துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர் விளக்கமறியலில்

தமிழ்வின்  தமிழ்வின்
பேலியகொட துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர் விளக்கமறியலில்

பேலியகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபரை கொழும்பு பிரதன நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போதே எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி இருவர் மீது மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை