சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக இருவருக்கு பதவி உயர்வு

தமிழ்வின்  தமிழ்வின்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக இருவருக்கு பதவி உயர்வு

பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.கே.மெவன் சில்வா மற்றும் மோசடி விசாரணைப் பிரிவில் பணிபுரியும் பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ.யூ.எஸ் பெரேரா ஆகிய இரு அதிகாரிகளே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அதிகாரிகள் இருவரும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலக்கதை