இலங்கையில் ஜெனீவா காரியாலயம் அமைக்கும் கோரிக்கை நிராகரிப்பு!

தமிழ்வின்  தமிழ்வின்
இலங்கையில் ஜெனீவா காரியாலயம் அமைக்கும் கோரிக்கை நிராகரிப்பு!

இலங்கையில் ஜெனீவா காரியாலயம் அமைக்கும் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

தமது காரியாலயமொன்றை அமைப்பது குறித்து ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், இவ்வாறு இலங்கையில் காரியாலயமொன்றை அமைக்க இடமளிக்கப்பட முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு காரியாலயம் அமைப்பதன் மூலம் இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தலையீடு செய்யக்கூடிய சாத்தியம் காணப்படும் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் புலி ஆதரவு தரப்புக்களே இவ்வாறு காரியாலயம் அமைக்கப்பட வேண்டுமென மனித உரிமைப் பேரவையிடம் யோசனை முன்வைத்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை