வடக்கு முதல்வரின் கனவு நனவாகாது! ஜே.வி.பி

தமிழ்வின்  தமிழ்வின்
வடக்கு முதல்வரின் கனவு நனவாகாது! ஜே.வி.பி

வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை,  வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள்  கனவாகவே தொடர்ந்தும் இருக்கும் என ஜே.வி.பி கூறியுள்ளது.

ஜே. வி. பி. தொழிற்சங்க தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான வசந்த சமரசிங்க ஊடகம் ஒன்றுக்கு இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒருவர் காணும் கனவை தடுத்து நிறுத்தும் அதிகாரம் தாம் உள்ளிட்டவர்களுக்கு இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், அந்த கனவை நிஜமாக்குவதன் மூலம் நாட்டின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை இல்லாதொழிக்க தாம் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஆயினும், தமது தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு மாகாண சபைகளை பயன்படுத்துவது கவலைக்குரிய விடயமாகும் என அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முன்மொழியப்பட்டுள்ள யோசனை மக்களிடையே காணப்படும் நல்லிணக்கத்தனை குழப்பக்கூடியது என்பதனால் தாம் இதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை