அரசியலில் படையினர் ஈடுபடக்கூடாது! ராஜாங்க அமைச்சர்

தமிழ்வின்  தமிழ்வின்
அரசியலில் படையினர் ஈடுபடக்கூடாது! ராஜாங்க அமைச்சர்

இலங்கையின் முப்படையினரும் அரசியல் அட்டவணைகளுக்காக செயற்படாது, நாட்டையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல்மாகாணத்தில் இடம்பெற்ற படையினர்சார் நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சராக செயற்படும் ஜனாதிபதி உரிய திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் ஒருபோதும் எவரையும் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை