தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ஒரு கட்சி விலகல்
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது.
மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
தேமுதிக உடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்து தேர்தலை கூட்டாக சந்திக்கிறது.
இந்த கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகள், சிறிய கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சி ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
மேலும், தொகுதி உடன்பாடு ஏற்படாததால், வாபஸ் பெறுவதாக அக்கட்சியின் தலைவர் சிக்கந்தர் தெரிவித்துள்ளார்.