இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இவரது பந்துவீச்சா?

LANKASRI SPORTS  LANKASRI SPORTS
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இவரது பந்துவீச்சா?

டி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி பலப்பரிட்சை நடத்தியதில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் தவறுகள்தான் தோல்விக்கு காரணம் என தற்போது பரவலாக பேசப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சிம்மன்சுக்கு அஸ்வின் வீசிய நோ-பால் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாக கூறப்படுகிறது.

ஆனால், காலங்களாக பந்துவீச்சில் அஸ்வின் தவறுகளே செய்ததில்லை எனவும், தற்போது தவறிழைத்துள்ளதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இப்படியான் குற்றச்சாட்டினை எப்படி எதிர்கொள்வது எனவும் தமக்கு தெரியவில்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சிம்மன்ஸ் 15 ஓட்டங்களுடன் இருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது, ஆனால் அந்த பந்து நடுவரால் நோ-பால் என கூறப்பட்டது.

அதன் பின்னர் அதிரடி காட்டிய சிம்மன்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணியை இறுதிப் போட்டிக்கு இட்டுச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை