வெற்றியுடன் தொடங்குவோம்: ரோஹித் சர்மாவின் நம்பிக்கை

LANKASRI SPORTS  LANKASRI SPORTS
வெற்றியுடன் தொடங்குவோம்: ரோஹித் சர்மாவின் நம்பிக்கை

9வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது, இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதுகுறித்து மும்பை அணியின் அணித்தலைவரான சுரேஷ் ரெய்னா கூறுகையில், கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்ததில்லை.

கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் சரிவை எதிர்கொள்ள விரும்பவில்லை.

எனவே இந்த ஆண்டு தொடக்க போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறோம், வெற்றியுடன் தொடங்குவதே மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து மிக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகளில் சென்னை சூப்பர் கிங்சும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் அந்த அணியின் அளப்பரிய முன்னேற்றம், தரத்தை பறைசாற்றுவதாக இருந்தது.

ஒரு அணியாக அவர்களை தவற விடுகிறோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். கடுமையான போட்டி அளிக்கக்கூடிய அவர்களுக்கு எதிராக விளையாட முடியாமல் போகிறதே என்று ஒவ்வொரு அணி வீரர்களும் வருத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை