ஐபிஎல் தொடரிலும் யுவராஜ் சிங் “அவுட்”: ரசிகர்கள் ஏமாற்றம்

LANKASRI SPORTS  LANKASRI SPORTS
ஐபிஎல் தொடரிலும் யுவராஜ் சிங் “அவுட்”: ரசிகர்கள் ஏமாற்றம்

9வது ஐபிஎல் தொடர் எதிர்வரும் 9ம் திகதி தொடங்குகிறது. இதற்காக இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் அதிரடி வீரரான யுவராஜ் சிங் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.

டி20 உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தொடரில் இருந்து விலகினார்.

இந்நிலையில் யுவராஜ் சிங்கின் காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில், ”யுவராஜ் சிங் போன்ற ஒரு வீரர் அனைத்து அணிக்கும் தேவை. அவர் மேட்ச் வின்னர் மட்டுமல்ல, மிடில் ஓவரில் சிறந்த பந்துவீச்சாளர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக 2 வாரங்களுக்கு அவர் அணியில் இடம்பெறமாட்டார். அதேசமயம் அவரது காயம் குணமடைய எவ்வளவு நாள் எடுக்கும் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

மூலக்கதை