நூறு ரூபாயை தொலைத்த சோகம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
நூறு ரூபாயை தொலைத்த சோகம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.100 தொலைத்த சோகத்தில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியின் கல்யான்புரியைச் சேர்ந்தவர் 18 வயதான சிவம். இவர் கிடைக்கும் வேலையைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பணியாற்றிய சிவத்துக்கு ரூ.300 சம்பளமாகக் கிடைத்துள்ளது.

இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் ரூ.100 கையில் இருந்து எங்கேயோ தொலைத்துவிட்டார்.

மனம் உடைந்து போன சிவம், அதையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அன்றிரவு வீட்டில் உள்ள மின் விரிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் அவருக்குக் கிடைத்த பணத்தை அவர் தொலைத்துவிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.

மூலக்கதை