மானத்தை வாங்காதீர்கள்: நடிகர் சங்கத்துக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

மாலை மலர்  மாலை மலர்
மானத்தை வாங்காதீர்கள்: நடிகர் சங்கத்துக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ். அவர்  தன்னுடைய மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் 'காட்டுப்புறா'. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தியாகராயர் கிளப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆடியோவை வெளியிட்டார்.

விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது. இந்த பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். குடும்பத்துடன் பழகிடும் குடும்ப நண்பர். என் காலத்தில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்.

நான் 30 ஆண்டுகளுக்கு முன் 'செம்பருத்தி' எடுத்தபோது அவர் 'கடல்புறா' எடுத்தார். இப்போது 'காட்டுப்புறா' எடுத்திருக்கிறார். அவர் மகன் அன்று கைக்குழந்தை, இன்று கதாநாயகனாகி இருக்கிறான். 8 பேக் வைத்திருக்கிறான்.

ஒரு நாள் பாபு கணேஷ் எனக்கு தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினார். என் மகனை சிசிஎல்லில் சேர்க்காமல் தவிர்த்து விட்டார்கள் என்று. ஏதாவது செய்ய முடியுமா? என்றார். அது நடிகர் சங்கம் சம்பந்தப்பட்டது நான் ஒன்றும் செய்ய முடியாதுப்பா என்றேன்.

என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் என்னிடம் கேட்டாள். 'என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..' அவள் என்னைக் கேலி செய்தாள். செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் நடிகர்கள் சரியாக ஆடாததைத்தான் அப்படிச் சொல்லிக் காட்டினாள்.

யாரோ நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைக்கிறார்கள். தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது.

நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள். ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள். இப்படி மானத்தை வாங்காதீர்கள் என்று பேசினார்.

விழாவில் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் சுப்ரமணியன், மிஸ்டர் வேர்ல்டு ராஜேந்திரமணி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி , பாடகர் கானாபாலா, பாடகி வாணி ஜெயராம், இயல்இசை நாடக மன்ற செயலாளர் சச்சு. தயாரிப்பாளர்கள் 'பிலிம் சேம்பர்' காட்ரகட்ட பிரசாத், ஜெயந்தி சண்ணப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மூலக்கதை