தேர்தல் பிரசார களைப்பில் ரோட்டோர கடையில் டீ குடித்த குஷ்பு

மாலை மலர்  மாலை மலர்
தேர்தல் பிரசார களைப்பில் ரோட்டோர கடையில் டீ குடித்த குஷ்பு

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டம் முடிந்ததும் திருவனந்தபுரத்துக்கு விமானத்தை பிடிப்பதற்காக அவசர, அவசரமாக காரில் புறப்பட்டார்.

இரவு உணவு சாப்பிடாமல் களைப்பில் இருந்த குஷ்பு மார்த்தாண்டம் அருகே சென்ற போது ரோட்டோர டீ கடையில் காரை நிறுத்தி காபி குடிக்க சென்றார்.

கேரளாவில் ‘கட்டஞ்சாயா’ (பால் ஊற்றாத காபி) புகழ் பெற்றது. இதனால் அவர் ‘கட்டஞ்சாயா’ கேட்டார். உதவியாளர்கள் வாங்கி கொடுத்த சாயாவை காருக்குள் இருந்த படியே ருசித்து குடித்தார்.

நள்ளிரவு நேரம் என்பதால் கடையில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனாலும் காருக்குள் குஷ்பு இருக்கிறார் என்பதை அறிந்ததும் கடையில் நின்று கொண்டிருந்த ஒரு சிலர் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர்.

சாயாவை குடித்து முடித்து கண்ணாடி டம்ளரை கொடுத்த குஷ்பு அங்கு நின்றவர்களை பார்த்து சிரித்தபடியே காங்கிரஸ் கூட்டணிக்கு ‘‘வோட் பண்ணுங்க‘‘ என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

மூலக்கதை